Tuesday 28 June 2016

என் வருகையில்..!


மொழியற்று போன
மௌனங்கள் சொல்லும்
மனதோடு கொல்லும்
பிரிவின் வேதனைகளை!

பார்க்க நீ வேண்டி
பழகிய காலங்கள்..

ஏற்க மனமின்றி
எதற்கும் துணிவின்றி
எதிர்க்கும் துணையின்றி..

மாகாணங்கள் கடந்து
இருவேறு திசையோடு
இதயம் மறந்து
போன இரு மனங்கள்!

நயமெனவே பாவனைகள்
நம்மோடு
நான் ஊரோடும்
நீ வீடோடும் ஆக..!

நாளும் உன் நலம்
அடையாளம்
நான்  காண
பெரு வண்ணம்
உன் எண்ணம்
உணர்வேன் நான்..!

தொலைத்த காதல்
தொலைவோடு நான்!
ஏதொரு
பயனோ பலனோ
இனி இல்லை
என் வருகையில்!

புதையுண்டு போகட்டும்
கல்லறை குவியல்களோடு
நம்
காதலும்
உறவும்!

No comments:

Post a Comment