உச்சாணி கொம்பேறி
ஊருக்கெல்லாம் நேசப்பட்டு
ஊர் முழுக்க கண்பட்டு!
சமதர்மம் பேசி
என் சமயோகிதம் தொலைத்தேனே!
காசும் தான் சேக்கலையே
காதலும் தான் கூடலையே..
சேர்த்து வச்ச சொத்தெல்லாம்
காதலுனும் - அன்பென்ற
ஒன்று அணையாது என்றும்..
கருத்து பேசி
எதிர்காலம் தொலைத்தேன்..
வெட்டுப்பட்டும்
கட்டுமரமாகி கடல் சென்றேன்!
காரிருளில் கடும்புயலில்
ஆழிபேரலையாய் எழும் அலைகளில்
கட்டுமரம் நிலைகுலைய...
வந்தோர் எல்லாம் பத்திரமா கரை சேர
கட்டுமரம் மட்டும் நொருங்க
வாழ்கை நியதி அறிய கண்டேன்!
உச்சாணி கொம்பேறி
ஊருக்கெல்லாம் நேசப்பட்டு
ஊர் முழுக்க கண்பட்டு!
அத்துவான காட்டில்
ஆகாச மேட்டில்
அச்சாணி கழன்று
நேசம் தேடி திக்கத்து நிக்கிறேன்..!
No comments:
Post a Comment