Friday 8 April 2016

நிறைந்தது!!




சொந்தங்களின் பந்தலில் 
தனியெனவெ வாழ்ந்தாய்! 
தமையனின் பாசத்தில் 
தாய் தந்தை கண்டாய்..!

தனியென விட்டு 
தமையனும் பிரிய- யாருமன்றி 
தடைகள் தாண்டினாய் - தனித்தே!
தனித்துவம் கொண்டாய்..

கடந்து வந்த கர்ம காலங்களில் 
உன் கால்கள் சிறிதும் 
தடு மாறவில்லை 
தடம் மாறவில்லை! 

பாதைகளின் கடினங்களில் 
பாதங்கள் பழுதடயவில்லை!

மிரட்சி கொண்டதில்லை 
உன் விழிகள்! 
வரட்சி கொண்டதில்லை 
உன் இதழ்கள்! 

அடையும் இலக்கு நேர்கொண்டு 
பயணித்தாய்! 

தனித்தவம் கொண்டாய் 
இத்தனை நாட்களாய் 
இத்துணை சேரவே!

இன்று பூப்பந்தலில் 
உன் பாதங்கள் 
புது மலரனவே!

பூமாலை சூடுகிறாய்..!
புதுமனை புகுகிறாய்!

நிறைந்தது- 
என் மனதின் கணமும் 
உன் வாழ்வின் ரணமும்!
உடன் வருவேன் நட்போடு 
உயிர் தோழன் எனவே!!

No comments:

Post a Comment