Thursday 7 April 2016

எப்பொழுதுகளிலும் ஒற்றை நிலவென நீயே என் வானில்!




கட்டவிழ்த்து விடப்பட்ட 
காங்கேயங் காளையென 
குதித்தோடி வரும் என் கண்கள் 
உன் திசை பார்த்து - தினந்தோறும்! 

எப்பொழுதுகளிலும் ஒற்றை 
நிலவென 
நீயே என் வானில்!

தனிமையில்  இரவில் - 
தலையனை நீயாக..
ஒத்திகைகள் ஓராயிரம் 
என் காதல் ஒப்புவிக்க..

கணக்குகள் நினைவில் இல்லை 
எதிர்பார்த்து காற்றோடு காத்திருந்த நாட்கள்..
காதல் உரைக்க எத்தனித்த தருணங்கள்..

எதிர் உன்னை பார்க்க 
ஊமையாகிறேன் பேதை நான்!

எப்படி அப்படி ஓர் அசட்டு 
தைரியம் என்னுள்..
புரியாத புதிராய் இன்றும்!!

மன ஆசை தொடுக்கிறேன் 
அழகாய் மறுத்து - உன் பாதை 
தொடர்கிறாய் !

வலிகள் இருந்தும்..
உன்னை ரசித்த வண்ணம் நான் !

நட்சத்திரங்கள் காணாமல் போக 
முழு நிலவென ஒளிர்கிறாய் 
என் வானில் அன்று!!

தயக்கம் கொண்டு 
தவிர்த்தே வருகிறேன் 
மறுமுறை உன்னிடம் வர..

காத்திருக்கிறேன் நான்!
காலம் கரைத்திடாதோ எண்ணி.
குருட்டு நம்பிக்கையில்..!

நாட்கள் நகன்றோடி
வருடங்கள் ஆயிற்று பல 
இன்றோடு!!

மருகி போகிறேன்- 
கண்முன்னே என் காதல் 
எரிய காண்கிறேன் - உன்  
மண ஓலை கண்டு!

வருகிறேன் நானும் 
உன்னை மணமகளாய் காண..
மணமேடை ஏறுகிறாய் நீ

மண்டபத்தின் ஓரமாய் - உன்னை
ரசித்த வண்ணம் நான்.. 
வலிகள் இருந்தும்..!

கண்முன்னே என் காதல் 
எரிய கண்டேன்!!
எறிந்த சாம்பல் அள்ளி பூசுகிறேன்
நானும் சிவனாகிறேன்!!
என்னில் பாதியாய் என் காதல்!!

ஆம்!மறக்க வேண்டிய 
மணித்துளிகள்  தாம் அவை!!
வலிகள் இருந்தும் 
ரசிக்கிறேன் நான்..

பத்திரப்படுத்தி வைத்திருப்பேன்
உன் காதலை 
என்றும் உனக்காக.. 

எப்பொழுதுகளிலும் ஒற்றை 
நிலவென 
நீயே என் வானில்!

No comments:

Post a Comment