காலங்கள் -காலமாகி போனது!
உடன் வரவே நீ இருக்க..
உன் சுவாசம் தேடி ஓடி
நான் வந்தேன்
உடன் வந்தோரை உதறிவிட்டு!
காற்றின் கரிசனத்தில்
காதோரோம் வந்த செய்தி
அறிய கண்டு...
காதல் கரையோரம்
மனம் நனைய கொண்டேன்
உன் நினைவை கொண்டேன்..!
கண்ணும் களவுமென
மற்றோர் கண் மறைத்தே
கவனமென யாவும் நாம் செய்ய...
ஆயினும்..
யாவரும் கள்ளத்தனம்
உணரக்கண்டு..
ஒதுங்கியே உரையாடினோம்
உள்ளுக்குள்ளே..
பார்வை பரிமாறினோம் நெஞ்சுக்குள்ளே..
போதும் இது-என
தனியனவே நானும் இருந்த
காலங்கள் -காலமாகி போனது!
துணையெனவே வர துடிக்கிறோம் நாம்!
No comments:
Post a Comment