Thursday 21 April 2016

மனிதம் வீசி எறிகிறேன்!!


அக்னிப்பிழம்பு ஒன்று
என்னுள் ஆறாது எரிய கண்டு
மனிதம் வீசி எறிகிறேன்
அதனுள்!!

கடந்து வந்த யாவும்
முற்றும் கலைந்து போனது
என்னை துளைத்து போனது!

துணைப்புள்ளி யாருமின்றி
ஒற்றை புள்ளியென
முற்றுமாய் நான்.

ஆசைப்பெருக்கம் கொண்டேன்
நீள் வளர்ந்த நகக்கண்கள்
நறுக்கிட!

கிளை ஒடித்து
வேர் அறுத்து
சலசலக்கும் ஆற்று நீர்
நனைத்து
மீண்டும் விதைக்கணும்
நான் புதிதாய் முளைக்கனும்!!

No comments:

Post a Comment