Thursday 21 April 2016

நடுவிடம் சேரணும்!



மூடுபனி கவிந்த விடியலில்
வெண்பனியோடு சரசம்
கொள்ளும் என் மேனி!

பதின்மன் பருவமெனில்
அதீதம் ஆயிரம்!

உப்பங்கழி நீரென
நடுவிடம் சேராமல்
ஒதுங்கியே!!

சிறப்பு என்பதா
என் பிறப்பு என்பதா!

புலனாய்வு கொள்ள 
புலன்களுக்கு
உயிர் இல்லை!

ஞாயிறு உறிய கரைகிறேன்
காலக்கடிகாரம் கடந்தேரனும்
மாரியென மாறி
நானும் பொழியனும்

மலைகளில் உருண்டோடி 
நதிகளில் நனையனும்
சலசலக்கும் ஆற்றில் ஆர்ப்பரிக்கணும்
நடுவிடம் சேரணும்!

No comments:

Post a Comment