பறந்து போகிறேன்
வினா எழாமல்
இல்லை - என்னுள்..
வெறுப்பு இல்லை- அஃது
ஒரு விருப்பமும் இல்லை
என்பது யாவரும் அறியும் மெய்..
பின் ஏனிந்த பயணம்!
மறுப்பு சொல்ல முடியா
காரணம் கொண்டு
காரணியாய் செயல்படுகிறேன்..!
கடந்து சென்ற காற்றில்
என்னுள்
கலந்தவைகளை
கலைந்தவைகளை
களைந்துவிட!
ரணம் தாங்கி
எடுத்து வைக்கிறேன்
அடுத்த அடி!
நானறிய என் கோணம்
தவறு இல்லை!!
மற்றவை அறிவான் - யாவும்
அரங்கேற்றும் பராபரமே!
No comments:
Post a Comment