நிலா இரவில்
நம் இருவரின் தனிமையில்..
முன்னொரு நாளில்
நடு முதுகினில் குத்தப்பட்ட
என் காதல் கா(வி)யம்
உரையாடினோம்!
அன்போடு அரவணைத்து
நிகழாது இனி
ஒரு பொழுதும் என்றாய்!
நிலா இரவில்
நம் இருவரின் தனிமையில்..
கலங்கிய காதல் கண்களோடு
பிரிவோம் என நீ அடிக்கோடிட்டு
சொன்ன வார்த்தைகள்
ஒவ்வொன்றும்
தேர்ந்த வாள் வீச்சுகள்
என் நெஞ்சில்!
வாக்கு நிறைவேற்றினாய்
நன்கெனவே!
முதுகின்றி நெஞ்சாகி போனது
இம்முறை!
நிலா இரவில்
தனிமையில் நான்..
கலங்கிய காதல் கண்களோடு!
No comments:
Post a Comment