இளைப்பாற நேரமின்றி
கவலைகளில் களைப்புற்று
காதல் நினைவுகளோடு
நாட்கள் நகர்த்தினேன்
நானும் தான்..!
வெகு நாள் களித்து
களிப்புறும் நிகழ்வு
காண கண்டேன்..!
கண்ணோடு
கண்ணீர் கடல் கொண்டேன்!!
தூக்கம் வராத ஒரு
நடுநிசியின் பின்னிரவில்
நானும் ஓர்
உறுதி கொண்டேன்..!
விருப்பம் அற்ற மாற்றங்கள்
மிகவும்
துயரமானவை!!
இனி யதார்த்தம் உணர்ந்து
வாழ பழகினேன்..!
என்னின் வைராக்கியங்கள்
அனைத்தும்
உன் அன்பிற்கு முன்னால்
கொஞ்சம் கொஞ்சமாய்
தன் பலம் தொலைத்தன..!
ஒவ்வொரு முறையும்
பார்க்கையில்
ஏதேதோ அர்த்தம் தாங்கி
சிரிக்கிறாய்..!
மிகை ஆகாத அளவில்
உலகின் மிக அழகான
சிரிப்பை
உதிர்க்கிறாய்!
அஃது சிரிப்பு அல்ல
சிம்பொனி..!
உன் விரல் பிடிக்கிறேன் நான்..!
வெட்கம் உதிர்க்கிறாய்..நீ!
இனிப்பு எடுத்து கொள்ளுங்கள்
காதல் பிறந்துருக்கிறது..!
No comments:
Post a Comment