Thursday 16 February 2017

வெண்ணிற இரவுகள் ..!



ஒப்புக் கொள்வதில்
ஐயம் ஏதுமில்லை..!

ஏதுமில்லா என்னிடத்தில்..
ஐயம் இருந்திட
வாய்ப்பில்லை
என நன்கு நீ அறிவாய்..!

சந்தித்திடாத ஓர் சந்தர்ப்பம்..!
ஆதலின் சிறு தயக்கம்
என்னோடு..!

முன்னின்று எதிர் கொள்ளவா..?
காலம் கடத்தி
நேரம் தாழ்த்தி
அதனின் போக்கில்
சென்றிடவா..?

கேள்வி கணைகள்
தனிமையில் எனில்
என் தயக்கங்கள்
தவிர்த்திருவேனோ..?

மேற்கோள் கொண்டிராத
பொருள் தேடிடாத
நீட்சியற்ற ஆசைகள்..!
எதனின் பொருட்டு
ஆசைகள் நிறுக்கப்படும்..!

நேர்மை நேர்கோடுகள்..!
வரைமுறைகள் தாண்டாத
வார்த்தைகள்..!
எதனின் கொண்டு
மனிதம் நிர்ணயிக்கப்படும்..!
 
எதனின் எதனால்
ஆராயும் பொருட்டு
விடை தேடிடும்
வினாக்கள் இல்லை..!

அடை தேடி
அலைந்திடும்
பறவை நான்..!

இதனின் இதன்பால்
என்றின்றி
புரிதலின் பயன் பால்
மீட்டிடணும் உறவு..!

சில சமயங்களில்..
ஊருக்கென சிரித்தாலும்
கண்ணீர் வரும் நினைவுகள்..!

சில சமயங்களில்
உறங்கவே நினைத்தாலும்
கண்ணீர் தரும் கனவுகள்
மீட்டிடும் - சில
வெண்ணிற இரவுகள் ..!

No comments:

Post a Comment