பழிச்சொல் சாமரம்
வீசியதில்லை
எந்நிலையிலும் நானறிந்து..!
ஏனெனில்..
உன் வாஞ்சைகளில்
வஞ்சங்கள் கண்டதில்லை...!
சுய சுற்றம் கொண்ட
பாச நலத்தின்
விலை என்னுயிராகி
போய்விடின் என்றுணர்ந்தின்
நிஜம் மாறியிருக்குமோ...?
தொடர்ந்திடும்
நித்திரை நினைவுகள்
தொலைத்திட்ட உறவுகள்
நித்தம் என் மடிமீது
நித்திரை வார்த்திருக்கும்...!
எந்நிலையிலும்
பழிச்சொல் சாமரம்
வீசிடமாட்டேன்...!
வார்த்தைகளை
வருத்தங்களின் வடிகால்
என கொண்டு...!
நினைவுகளில் சமரசம்
பூண்டு..!
தன்னிறைவு கொண்டு..!
இலக்கண பிழை
தான் ஆயினும்
மீளப்பெற்றிட முடியா
பிழையாகி...!
பிழை கொண்ட வாழ்வே
வாழ்வோம்...!
மிகையென தோன்றினும்...
எதிரிலே எனை நீ காணினும்..!
எதிரியாய் எனை நீ காணினும்...!
யாதுமாகி நீயும் நின்
நினைவும் தொடர்ந்திட...
இருள் நிழலென
தொடர்ந்திடுவேன் - நின்
அகமும் புறமும்
அறிந்திடாமல்...!
No comments:
Post a Comment