Friday 27 January 2017

சிறைச்சாலை கம்பிகள்..!


சதுரங்க ஆட்டத்தின்
சாதுர்ய வாய்மொழி கேட்டு
சாமர்த்தியம் கெட்டு..!

சிப்பாய் நானோ...
கையூட்டு மட்டுமின்றி
வாயூட்டு பூட்டோடும்...!

அடிகள் முன்னெடுத்து
வைக்கிறேன்- விழப்போகும்
அடிகள் அறியாமல்..!

தனியொரு சிப்பாய் என
கடைசி கட்டம்
நோக்கி நகர்த்துகிறாய்..
ராணியை மீட்டெடுக்க..!

சகுனி நீயோ...?
தருமன் நானோ..?
பகடை உருட்டினாய்
பாடையில் ஏற்றினாய்..!

சக்கரவியூகம் கொண்டு
போற்றி தேற்றி
நாண் ஏற்றிய
வில்லேற்றி அனுப்புகிறாய்..!

வகுத்த வியூகங்கள்...
வளைத்த வில்லோடு
சென்ற அம்புகள்  யாவும்
வில்லாளினியிடம் வீணற்று
ஆகிட-  கழு ஏற்றிடுவாய்
என்று எக்கணம் நீ அறிவாய்..!

பாதங்களில் பூக்கள் படர..
பாதைகளில் பூக்கள் தூவினாய்..!
பாடைகளில் விழுமென,
பாடை தூக்கியின்
பாதம் விழுமென...
எங்கனம் நீ அறிவாய்..!

சிறைச்சாலை கம்பிகள்
விடுதலை அறியாது..!

கல்லறை செல்லும்
பூக்களின் வாசம்
நுகரப்படாது..!

யாரும் நுகராமல்
வாசம் அறியாமல்
கல்லறை பூவென
ஆனேனோ..!!

No comments:

Post a Comment