தனியனவே ஒதுங்கி செல்கிறேன்
ஓர் ஓரமாய்
என் வாழ்கை பரிசலில்..!
உடன் வந்தோர் அனைவரும்
பாதியில் தான்
பாதை மாறி சென்றோர்
என் வாழ்க்கை பரிசல் விட்டு!!
எவர் பரிசலும் உரசாமல்
உயிர் துடுப்பு ஏந்தி
பயணம் செய்கிறேன்!!
தனியன தானே ஒதுங்கி செல்கிறேன்..
இருந்தும் அடிபடுகின்றேன்
பெரிதாய் உடைபடுகின்றேன்
நொருங்குகின்றென் பல நூறாய்...!!
கை தவறும் உயிர் துடுப்பு..
தனியன தானே நான்
மறைந்து போகிறேன்..!!
No comments:
Post a Comment