சற்றே தாமதித்தாலும் உன்
விழித்திரையில் கண்ணீர்
வழிந்தோடிவிடும் தருவாயில்
அந்த இரவின் தனிமையில் நீ!!
தூரத்தில் என் உருவம் கண்டு
கொண்ட அந்த ஒரு நொடியில் ..
தேங்கி கிடந்த உன் பயம்
ஏங்கி தவித்த உன் பாசம்
அனைத்தும் சேர்த்து
என் விரல் இருக்கிய
உன் விரல்களில் உணர்ந்தேன்
யாதுமாகி நான் இருக்கிறேன் என்று..
ஒரு கணமும் உணரவில்லை
இன்று யாருமின்றி நான் இருப்பேன் என..
No comments:
Post a Comment