நீ இன்றி
என் நாள் காட்டி
நகர்ந்திடாது..!
வார்த்தைகள் அசீரிரியாய்
என் செவிகளோடு
இப்பொழுதிலும்..!
நாளும் கடந்து
வருஷம் கூட
முடிஞ்சுருச்சு..!
உறவுகள் மாறுகையில்
உண்மைகள் உதிர்ந்திடுமோ..!
உதிர்த்த வார்த்தைகள்
உதடுகளில் உறைந்திடுமோ..!
ஊமையாகி போனதோ
உன் வார்த்தைகளும்
என் வாழ்க்கையும்..!
பிரியும் நாள்மட்டிலும்
புரியவைத்திட முயன்ற
நடைமுறை விளக்கம்
நிஜங்களாய் காணுகையில்
புரிந்திருக்கும் என நம்புகிறேன்..!
வாய்த்திருந்த வாய்ப்புகள்
தவறவிட்ட தருணங்கள்
பாதை தவறிய இரு பாதங்கள்..!
வாழ்க்கை தவறிய இரு மனங்கள்..!
சொற்ப நிமிடங்களில்
முடிந்து போயிட
இஃது அஃதில்லவே...!
உந்தன்
அன்போடும்
அணைப்போடும்
அரவணைப்போடும்
நான் கண்ட
ஆத்மீக நெருக்கம்...!
கொண்ட என் காதல்..
இன்னுமொரு காதல்
எங்கேனும் வந்தினும்
உன் இணைப்பெறாது..!
உன்போல்
ஓர் துணைப்பெறாது..!
நித்தம்...
கொல்லும் தனிமை..!!
சொல்லும் உன் அருமை..!
ஓர் நல்ல புத்தகத்தின்
கடைசி பக்கம்
படிக்க முடியாமல்
கனமான மனதோடு
விட்டு பிரிந்தேன்..!
ஓர் நல்ல கதை சொல்லி
நானே ஓர்
நன் முடிவோடு
செல்கிறேன்!
No comments:
Post a Comment