Monday 12 December 2016

கூவுகிறேன்..!


உன் பெயர் கூவுகையில்
சுமை தா
என்று கேட்டறிந்தாயோ..!
ஆதலின்
காதல் சுமை தந்தாயோ..?

உன்னோடு பேசுகையில்
விட்டு பறந்து சென்ற
பேடைபெயர்
சொல்லி அழுதேனோ.?

ஒவ்வொரு அழுகைகளிலும்
நீயும் ஓலமிடுவாய்..
என் சோகம் தாங்கி..
என் தேகம் தாங்கி
உன் தோள் கொண்டு..!

அணை கட்ட முடியா
உன் ஆசைகள்
ஒப்புவித்தாய்..!
சற்று யோசி என்றாய்..!

அன்று,
அளவுகளற்று யாசித்தும்
யோசிக்காமல் போனாயே..!

மீண்டும் வராதே இவ்வாழ்வு..!
தேடிடும் உயிர் நீ தானே..!
வந்திடு என்னோடு
வாழ்வோம் நூறாண்டு..!

பேசாத வார்த்தைகள்
பேசிட வேண்டிய கதைகள்
நூறாயிரம் உண்டு
என்னோடு..!

இன்று
இறந்த காலங்கள்..!
இறந்த காதல்கள்..!
உன் பேர் சொல்லி
மட்டுமே கூவுகின்றேன்..!

நித்தம் என் கனவில்
நீ உலா வருகிறாய்..!
உன் நினைவுகளில்
கொல்கிறாய்..!

ஏன் என்னை தனிமையில்
விட்டு போனாய்..!
எரியும் நெருப்பில்
சாவு வேண்டுகிறேன்..!
உன்னை தொலைத்த பாவி
நானாகிறேன்...!

இரவின் உறக்கத்திலும்
வெளிச்ச விடியலிலும்
உன் பெயர் கூவுகிறேன்...!

No comments:

Post a Comment