Wednesday 7 December 2016

இலக்கண பிழை..!


எல்லா உண்மைகளும்..
உண்மை காரணங்களும்
நீ மட்டுமே அறிவாய்..!

அவ்வுண்மைகள் உன்னை
ஊமை ஆக்கியதோ..!
அதனின் துணை கொண்டு
உண்மை மறைத்தாயோ..?

வாய்மை ஊமை ஆகி
பொய் உரைத்து விடின்
மெய் என ஏற்பாயோ??

பொய் உரைத்து
புது வாழ்வு
தேடிடும் ஆசைகள்
எனதோடு இல்லை..!

ஏமார்ந்து பழகியதால்
ஏமாற்றத்தின் வலி
அறிவேன் நான்..!
எக்காரணம் கொண்டு
யாரையும் ஏமாற்றிடாது..!

கூறிய நீள நிஜங்கள்
மன எண்ணங்களையும்
கனவின் வண்ணங்களையும்
மாற்றியதோ...?

அஃது,
அழகெனவே
அமுதனவே
நீல வண்ண பொய்கள்..

நிஜங்கள் என
சொல்லி இருப்பின்
ஏற்று இருப்பாயா..?

உதடுகளில் உதிர்ப்பது
நாக்கின் தயவில்
சந்தர்ப்பத்தில் வந்தது அல்ல..!
இதயத்தின் வாயில் தாண்டி
வந்த வார்தைகள்..!

உவமைகளோ உருவகங்களோ
கொண்டு உருவங்கள்
உருவாக்கவில்லை..!

காண்கின்ற யாரோடும்
சொல்லியதில்லை..
வாழ்வோடு வரும் உறவுகள்
மட்டும் அறிந்த உண்மை..!

சொல்லிடும் நேரத்தில்
இவ்வண்ணம் தோன்றிய
எண்ணம் என்னோடு இல்லை..!

பிற்போக்கு சிந்தனையில்
சிதைந்தவளா நீ?
முற்போக்கு சிந்தனைவாதி..
சிந்தனை சீர்திருத்தவாதி...
என்றல்லவா எண்ணியிருந்தேன்..?

உன் வயதின்
வேகம் தாண்டிய
உன் பக்குவத்தில்
பல வேலைகளில்
என் புருவங்கள் உயர்த்திருக்கிறாய்..!

சாட்சிகளும்
சாட்சிகள் கண்ட
காட்சிகளும் உண்டு..
நியாயம் நிரூபிக்க
ஆதாரங்கள் ஏதும் இல்லை..!

ஞானப்பார்வை கொண்டு...
தெளி நீர் பார்வை கண்டு..
காலங்கள் கடந்து
கடந்த கால பார்வை
விடுப்பாயோ..?

இல்லை
இலக்கண பிழை
இவன் என்று
என்னின் அத்தியாயம்
முடிப்பாயோ..!

No comments:

Post a Comment