Tuesday 18 October 2016

வாசங்களோடு வாழ்கிறேன்..!


நம் காதல் காலங்களில்
வசந்த நாட்களில்
பூத்த காதல் பூக்களை
முகர்ந்துகொண்டே இருப்பேன் !...

எங்கனம் எக்கணம்
விட்டெறிந்தாய்??

உன்னை வழியனுப்பிய
நாளில்
ரயில் பயணத்தின்
ஜன்னனல்களோடு
வீசியெறிந்தாயோ..?

உன் திருமண நாளின்
மணமாலை சூடுகையில்
நம் காதல்
பூக்கள் களைந்தாயோ..?

புதிதாய் பூத்த மலர்கள்
தூவிய
பூ மஞ்சங்களோடு
இணைகையில்
நம் காதல் மலர் கசக்கி
எறிந்தாயோ?

எங்கனம் எக்கணம்
விட்டெறிந்தாய்..?

சம்மதங்கள் கோரிய
என்னோடு சமாதானங்கள்
கூறிய வெள்ளை புறா
நீயோ!!

புதிதாய் புகுந்த வீட்டின்
புன்னகை
பூ தானே நீயும்!

தம்பதி சகிதம்
கோயில் செல்கையில்
கணவன் முதலாய் பூச்சூடிய
வேளையில்
காதல் பூவின் கரு
அறுத்தெறிந்தாயோ?

வீசிய மணம்
நேசம் கொண்ட மனம்
மாறிடாது..!
இன்றும்  என் வானின்
ஒற்றை கனா நீ!!

சில வார உறவின்
பிரிவு உபசரிப்பின்
சோகம் கொண்டு
திரும்புகையில்
காதல் மலர்
தொலைத்தாயோ??

எங்கனம் எக்கணம்
விட்டெறிந்தாய்??

சேகரித்த கனவோடு
கணவனோடு சிறிய பிரிவின்
துயரோடு
உன் தனிமை
நெடுந்தூர பயணத்தின்
பரிசு பூச்சண்டுகளில்
விரல் இடுக்குகளில்
விழ விட்டாயோ?

தவிப்புகளின் மத்தியில்
தரை இறங்கி
துணை கண்டு
ஓடுகையில்
ஓடு பாதையின்
பாதியில்
மறந்தாயோ?

தலை முழுகையில்
சருகென கண்டு
காதல் மலர்
முழுதும் முழுகினாயோ?

எங்கனம் எக்கணம்
விட்டெறிந்தாய்??

நம்முள் பூத்த
காதல் பூக்களின்
நினைவுகளோடு...

காதல் நினைவுகளில்
தினமும் லயித்து
காதல் பூக்களின் வாசங்களோடு
வாழ்கிறேன்..!

நம் காதல் காலங்களில்
வசந்த நாட்களில்
பூத்த காதல் பூக்களை
முகர்ந்துகொண்டே இருப்பேன் !...

No comments:

Post a Comment