என் நாமம் கொள்வேன் நான்?
என் நாமம் கொண்டேன் நான்?
கதைகள் கதைத்திட
யாவும் பகிர்ந்திட
கதை சொல்லி நானோ?
நம்பிக்கை தந்திட
சொல்லி திருத்திட
தோழன் நானோ?
உணர்வுகள் புரிந்திட
உயிரென்று எண்ணிட
யார் நானோ?
இதய மேடையில்
காதலின் நிகராய்
எதை நிறுத்தினும்
துலாபாரம் தோற்றே
போக கண்டேன்..!
என் தன்மானமே தோற்க்கையில்
காதலும் எடை குறைந்து
தோற்க காண்கிறேன்..!
எள்ளி நகையாடிட
தள்ளி பகைமூடிட
யாசகங்கள் கேட்கும்முன்
யோசனைகள் நூறாயிரம்..!
ஏதேதோ இழந்த போதிலும்
தன்மானம் தொலைத்திடாத
என் தோள்கள்..!
தொலைத்திடாத தன்மானம்
வரட்டும் என்னோடு!!
தள்ளி இருத்தல் நல்லது..!
தன்மானம் கருத்தில்
கொண்டு
காதலை விட்டு
தள்ளி இருத்தல் நன்று..!
No comments:
Post a Comment