Tuesday 27 September 2016

தென்னானுடைய சிவனே..!


தென்னானுடைய சிவனே..!
என்றும் என் நாமம் சிவனே!!
வேண்டுகிறேன்!
எனக்கே எனக்காய்
ஒரு வரம்..!

இஃது உன்னோடு
என்னின் கடைசி வேண்டுதலாய்
கூட இருக்கலாம்
நம்மின் கடைசி சந்திப்பாகவும்
இருக்கலாம்!!

ஏதேனும் ஓர் மாயம் செய்து
என்னையும் அவளையும்
சேர்த்துவிடு..

கிருஷ்ணனாய்
பாண்டவ போரில்
இராமனாய் இலங்கையில்
என ஏதேனும்
ஓர் பிறவி கொண்டு....
என் வேண்டுதல் கண்டு!!!!

அஃது அரங்கேறிவிட்டால்
நான் காதல் செய்யும்
நீவிரும்
அவளும்
என்னோடு இருப்பீர்கள்!!..

முடியாது ஆகின் எனச்சொல்லி
எல்லா வாயில்களையும்
அடைத்தீர்களே ஆனால்..

இன்றோடு என்
சுவாச காற்று வாயிலை
அடைத்து விடவும்

என் உயிரென எண்ணி
காதல் கொள்ளும்
நீவிரும் அவளும்
இல்லா
என் உலகில்
நான் இருப்பதை விட
இறப்பதே மேல்..!!

No comments:

Post a Comment