Wednesday 24 August 2016

அடைமழை..!



அடைமழை பெய்து முடிந்து
அந்தி சாயும் பொழுதென
என் வீடு

ஆட்கள் அற்று போன
என் வீதியெங்கும்
மழை நீர் மட்டும்
தேங்கியிருக்க...

நிஜ வானமும்
மழை நீரில் மிதக்கும்
வானத்து பிம்பமும்

நிலவு அற்று போன
என்
ரெட்டை வானங்களும்
வெறிச்சோடிய
மேகங்களோடு..!

அடை மழை ஓய்ந்த
அறிகுறியாய்

வீட்டு முற்றத்தில்
சேர்த்த மிச்ச
மழை நீரை
துளியென நான்
உதிர்கின்ற நேரம்..!

மற்றுமொரு
அடைமழை  தனை
என் வீட்டு கூரை தாங்காதே
உயிர் கூடு உறங்காதே..

போதும் இந்த
அடைமழைகள்..!
இனிமேல் எனக்கு
தனியென வாட்டும்
கோடையே போதுமே!!
மழை வாடை கூட வேண்டாமே!

No comments:

Post a Comment