Monday 23 May 2011

நான் சாமியாகிறேன்!



அர்த்தம் புரியா கனவு 
அர்த்த ராத்திரியில் அடிக்கடி வருவதுண்டு! 
தாய் தந்தை சொல்லி தந்தது 
சாகும் கனவு காண்பது தவறு!
அன்றிலிருந்து இன்றுவரை
சாவு என்றால் பயம்!

அர்த்தம் புரியா கனவு 
அர்த்த ராத்திரியில் அடிக்கடி வருவதுண்டு! 
உயிர் பிரியும் தருவாயில்
உன் மடியில் படுத்துக் 
முகம் பார்த்து மகிழ்வதாய் ஒரு கனவு!

சாகும் கனவு காண்பது தவறு!
சாவு என்றால் பயம்!!

இப்பொழுதெல்லாம் நீ வருகின்ற கனவுகளில் 
மட்டும் தான் தூக்கத்தை தொலைக்கிறேன்!
நானே இறப்பதாய் இருந்தாலும்
நீ வரும் கனவுகளுக்காக
மட்டும் தான் தூக்கத்தை விரும்புகிறேன்!
கனவில் மட்டுமே உன்னை காண்பதால்!

சாவு என்றால் பயம்!
சாவு என்றால் சாமியாவது!

என்னை காதலிப்பதாய்
சொல்லாவிட்டாலும் பரவாயில்லை!
காதலிப்பதாய் 
புரிந்து கொண்டாயெனில் போதும்!


தாய் தந்தை சொல்லி தந்தது 
சாகும் கனவு காண்பது தவறு!
சாவு என்றால் பயம்!
சாவு என்றால் சாமியாவது!


நான் சாமியாகிறேன்!
நான் சிவனாகிறேன்!

No comments:

Post a Comment