உன் எத்துப்பல்லின் அழகில்
ஒளிர்ந்த வெளிச்சம்
அறியாமல் திரிந்தேனோ..?
முயல் என்று உன்னை
சில நேரங்களில்
சொல்லி சிரித்ததுண்டு...!
கயல் என்று காதலோடு
உன் கண்ணை
வர்ணித்ததுண்டு..!
அப்பொன்றும் இப்பொன்றும்
அல்லாமல் எப்போதும்
என் துணை வேண்டி
தேடி இருந்தவள் நீ..!
நல்யோகம் வாய்க்க பெற்றும்
யோகி போல நான் இருக்க
துரோகி நான் தானே ஆவேன்..!
நீ ஏன் அழுகிறாய்..?
தொலைத்தவன் நான் தானே
காதலையும்
உன்னையும்...!
ஏதோ ஏழரை பிடித்தவன்
போலவே கடக்கின்றேன்
எல்லா நாளையும்..!
நீ இன்றி போன இங்கே
நான் எங்கு போனாலும்
நீயே..!
யார் வந்து
மீட்டு தருவார் உன்னை..?
மீண்டும் காதல்
வீணை வாசிக்க..?
No comments:
Post a Comment