Thursday 23 March 2017

இந்நாள் கடந்திருப்பேன்..!


யாவும் யாரோ ஆகிவிட
நான் யாராகி போனேன்
இன்று..?

சில நேரங்களில்
சொல்ல முடியா
தனிமை சோகங்களில்
விரக்தி சிரிப்பு
உதடுகளில் தவழும்..!

உன் பொருட்டு வேண்டி
பார்த்திட கூடாது
என்றுஒதுங்கி
ஊர் தாண்டி
உறவு தாண்டி
பறந்தொரு பயணம் போனவன்..!

பார்த்தால் என்னாவேன்
என்பதை தாண்டி..
என்னாவாய் நீ
என்றெண்ணிய எண்ணம்
மறந்திருக்க வாய்ப்பில்லை
நீயும் நானும்...!

அந்நிகழ்வு முடிந்து
ஓராண்டாகி போன
தருணத்தில்..

பயந்து ஒதுங்கிய
நிஜத்தின் நிழற்படம்
கண்முன் தீட்டுகிறாய்
கவலை மீட்டுகிறாய்
கண்ணீர் ஏற்றுகிறாய்
நினைவுகள் நீட்டுகிறாய்...!

நிகழும் நிஜ
காதல் காட்டுகிறாய்..!
ஜோடியாய் ஒன்றிணைந்த
அத்தனை படங்கள்
யாவும் ஓன்றிணைத்து
யாவும் நீ
என்ற
வாசகம் வடிக்கிறாய்..!
வாழ்க்கை யாசகம்
கூச்சலிடும் நான்..!

புகைப்படம் பார்த்த வேளையில்
நிமிடம் நகர மறுக்கிறது
ஒரு கணம்...!
யாவும் கனவோ..?
என்றெண்ணும்
மேதை தான்
இன்னமும் நான்..!

தேவை என்னென்று
புரியாத நான்..!
புரிந்த பொழுது
பாவை தேவையில்
நான் இல்லை..!

சாயம் போகுமோ காதலும்..?
மாயம் ஆகுமோ நின்
நினைவுகளும்..!
மறைத்தே போனாயோ..?
மறந்தே போனாயோ..?

என்னானேன் நான்..?
என்னாவேன் நான்..?
சிறு சிந்தனை - உன்
சிந்தையில் கொண்டிருந்தாய்
ஆயின் - இந்நாள்
கடந்திருப்பேன் -இன்னல்களற்று..!

அன்றொரு நாள்
ஏதோ ஒரு ஊரில்
யாரும் அறிந்திடா
இடம் தனில்
தனிமையில்
அழுது அழுதே
கடந்த என் அன் இந்நாள்..!

இன்று நீயும் நானும்
ஒன்றென இருந்திட்ட
என் அறையில்
மீண்டும் தனிமையில்
அழுது கடக்கிறேன்..!

ஒவ்வொரு வருடமும்
வந்தாக போகும் இந்நாள்...!
அழுகைக்கெனவே நான்
ஒதுக்கி வைத்துள்ள
உன் நன் நாள்..!
வாழ்க வளமுடன்...!

No comments:

Post a Comment